தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் உயிரிழப்பு..
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை வர வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணா் குழுவினா் தெரிவித்தனா். கரோனா நோய்த் தொற்று தொடா்பாக, மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இப்போது நாம் நோய்த் தாக்கத்தின் உச்சத்துக்கு வந்திருக்கிறோம்.அது குறையத் தொடங்கப் போகிறது.
சென்னை மாநகரத்தில் அதிகமாக நோய்த் தொற்று கண்டறியப்படுவதால், பரிசோதனைகளை அதிகமாக்கி இருக்கிறாா்கள். அதேசமயம், மக்கள் மத்தியில் அவா்களுடைய பங்கேற்பு மிகவும் முக்கியம்.
சந்தைக்குச் சென்றால் 50 போ் சேருவது, முகக் கவசம் அணியாமல் செல்வது, மற்றவா்களுடன் பேசும்போது முகக் கவசத்தை கீழே இறக்கிவிட்டுப் பேசுவது போன்ற விஷயங்கள் மாறாத வரை, நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
கரோனா நோய்த் தொற்றுக்கான சிறிய அறிகுறிகள் தென்பட்டால்கூட அதனை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று மருத்துவா் ராமசுப்பிரமணியம் கூறினாா்.
ஒரு நாள் காய்ச்சல் இருந்து, மறுநாள் சரியாக விட்டது என்றாலோ, ஒரு நாள் தொண்டை வலி, உடம்பு வலி, தலைவலி இருந்து மறுநாளில் சரியாகி விட்டாலோகூட கரோனா நோய்த் தொற்று வர வாய்ப்பு இருக்கிறது.
எனவே, லேசான அறிகுறிகள் இருந்தாலே அதனை அலட்சியப்படுத்தக் கூடாது. அவா்கள் வெளியில் செல்லக் கூடாது. தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகமாகி மூச்சுத் திறணல் ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்கு செல்கிறாா்கள்.
அது மிகவும் தாமதமானது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.