செய்திகள் -மாவட்ட எல்லைகளை மூட:


இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் முதல்வர்:


அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்ற உள்ளார்.


மாவட்டங்களில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மற்றும் கடுமையாக்குவது குறித்து ஆட்சியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் தற்போதுள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து செய்ய முடிவு?


- முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு என தகவல் 


அந்தந்த மாவட்ட எல்லைகளை மூடவும், மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்


_____________________


தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி எனத் தகவல்


தேனியில் 138 பேருக்கும், போடிநாயக்கனூரில் 21 பேருக்கும் கொரோனா உறுதி எனத் தகவல்


பெரியகுளம் பகுதியில் 65 பேருக்கும் கொரோனா உறுதி எனத் தகவல்


உசிலம்பட்டியிலும் எதிரொலித்த முழு ஊரடங்கு - வெறிச்சோடிய உசிலம்பட்டி பேருந்து நிலையம்


________________


மத்திய அரசு ஒப்புதல்:


இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


_____________


தொழிற்சாலையில் தீ விபத்து:


அகமதாபாத்தின் சனந்த் பகுதியில் உள்ள ஜி.ஐ.டி.சி (குஜராத் தொழிற்துறை மேம்பாட்டுக் கழகம்) தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


_____________


ராணுவ வீரர்களுடன் ஆலோசனை:


இந்திய ராணுவ தளபதி நராவனே கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.


__________________


ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு:


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், தென்தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


_______________________


நாட்டிலேயே முதல் முறை:


நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை உயர்ந்துள்ளது.


_________________



காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்:


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கடைசி கதவணையை வந்தடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.


_________________


48 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை:


பொதுமுடக்க விதிகளை மீறுதல், கூடுதல் நேரம் வியாபாரம் செய்தல் உள்ளிட்ட புகாரில் மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 48 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


____________________


விளையாட்டுச் செய்திகள்


விஸ்டன் இந்தியா, ஆன்லைன் மூலம் நடத்திய ஆய்வில் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். 


 


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.