கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 18 பேர் உயிரிழப்பு என தகவல்
* ஸ்டான்லி மருத்துவமனையில் 3, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5, ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர் பலி
* கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 18 பேர் சென்னையில் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்வு
* இதுவரை 2,48,190 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்
* இந்தியாவில் இதுவரை 14,011 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவால் உயிரிழந்த 38 பேரில் 23 பேர் சென்னையை சேர்ந்தவர்களும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 4, காஞ்சிபுரம் 2, விழுப்புரம் 2, தூத்துக்குடி மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா ஒருவர் ஆகும்.
___________________
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை WHO பாராட்டியுள்ளது - ராஜேந்திர பாலாஜி
அதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்
அறிக்கைகளால் மக்களை குழப்புவது, அவதூறாக கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது
- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி