ரூபா 20 லட்சம் கோடி 3ம் கட்ட அறிவிப்பு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்


ரூ.20 லட்சம் கோடி -3ம் கட்ட அறிவிப்பு


* விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன


* குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும்


 


* விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க கடந்த 2 மாதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன


* குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் ரூ.74,000 கோடி மதிப்பிலான விவசாய உற்பத்தி பொருட்கள் ஊரடங்கு காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன


இறால் இறக்குமதிக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது


மார்ச் மாதத்துடன் அங்கீகாரத்தை இழந்த 242 இறால் பண்ணைகள் மேலும் 3 மாதங்கள் செயல்பட அனுமதி -மத்திய நிதி அமைச்சகம்


பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடியான நாடாக உள்ளது


கரும்பு உற்பத்தி மற்றும் மீன் பிடித் தொழிலிலும் இந்தியா முன்னணியில் உள்ளது-


வேளாண் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு


அறுவடைக்கு பிந்தையை வேளாண் தேவைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி பயன்படுத்தப்படும்-


* 5.60 லட்சம் லிட்டர்  பால் கூட்டுறவு சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்டது - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்


* ஒரு நாளைக்கு 560 லட்சம் லிட்டர் பால் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது



புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 932 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளதாக தகவல்.


* மீன்பிடித் தொழில் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு போன்றவை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது


* விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப நிலைத் தொடர் நிலையங்கள் போன்றவற்றுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளன


தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு


ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டம் வெங்காயம்' தக்காளி. உருளைக்கிழங்கு' உள்ளிட்டவற்றில் இருந்து அனைத்து பழங்கள் காய்கறிகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது


வேளாண் விளைபொருட்களின் விநியோக சங்கிலியை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு


* 10 ஆயிரம் கோடி சிறு, குறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்


* சிறு உணவு நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது


அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் அதிக பயன் பெறுவார்கள்


     நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்