தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

 


    தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.


செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார் .

திமுக அரசு பொறுப்பு ஏற்ற முதல் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கபெறவில்லை.

இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது- மின் கட்டண உயர்வை எதிர்த்த ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேச்சு.

மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராகவே உள்ளார். திமுகவின் குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.



மக்களின் பிரச்னைகளில் திமுக கவனம் செலுத்தவில்லை.

திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு.

திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல்- மின் கட்டண உயர்வை எதிர்த்த ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேச்சு.


செய்தியாளர் கார்த்திக்