நான் முதல்வன்' திட்டம் தொடங்கி வைத்தார் முதல்வர்

 


        சென்னை, கலைவாணர் அரங்கில் 'நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக கிளவ்டு கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஜப்பான், சீன, ரஷ்ய, பிரெஞ்ச் மொழிகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.



இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எனது கனவு திட்டமான திறன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்தது என் வாழ்வின் பொன்னாள் ஆகும். மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம்.


பட்டப்படிப்பை தாண்டி தனித்திறமை இருந்தால் தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும். இளைஞர்கள் அனைவரும் அனைத்துவிதமான தகுதியும், திறமையும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும்.



கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை செயலில் திறமையானவர்களாக மாணவர்கள் இளைஞர்களை மாற்றவே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது. இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது. அதை நீக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


படிப்பு என்பது பட்டம் சார்ந்ததாக இல்லாமல், வேலை சார்ந்ததாக மாறவேண்டும். மூன்று பட்டங்கள் பெற்றவர்கள் கூட நான்கு பேர் முன்பு பேச தயக்கம் காட்டுகிறார்கள். ஒரு துறை சார்ந்த தெளிந்த அறிவு இல்லை என்று சொல்வதும் வருத்தமளிக்கிறது. கற்றவர்களுக்கு தனித்திறமை இல்லை என்பது கவலைப்பட வேண்டிய ஒன்று


நான் முதல்வன் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் உரக்கச் சொல்லும் போது உங்களுக்குள் நம்பிக்கை பிறக்கும். நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது என மனதிற்குள் இருக்கும் தடையை அகற்றும் நோக்கில் நான் முதல்வர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


. இந்தியாவின் இளைய சக்தியை பார்த்து தான் உலக நாடுகள் பயப்படுகின்றன. தனித்த திறமையை மாணவர்கள் கண்டறிந்து செயல்பட வேண்டும். படிப்பு என்பது திறமை சார்ந்ததாக மாற வேண்டும். 2026க்குள் இளைஞர்களின் திறன் மேம்பட வேண்டும் என்பதே இலக்கு


பெற்றோர்கள் சொன்னார்கள் என்பதற்காக பொறியியல், மருத்துவம் பயில வேண்டாம். எதில் ஆர்வம் உள்ளது என்பதைத் தேர்வு செய்து அதில் சேர வேண்டும். படித்தால் மட்டும் போதாது. படிக்கின்ற படிப்பில் முழு தெளிவு கொண்டிருக்க வேண்டும்.


பெற்ற தாய் போல மாணவர்கள், இளைஞர்கள் நலனில் அக்கறை ஆற்றல்மிக்க இளைஞர் வளத்தைத் தொழில்நுட்பக் காலத்திற்கேற்ப திறன்மிக்கதாக மாற்ற நான்_முதல்வன் என்ற திட்டத்தை கொண்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள புறத்தடைகளை உடைக்க வேண்டும் என்பதே 'நான் முதல்வன்' திட்டத்தின் நோக்கம்" என்று முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார்

*இந்நாள் என் வாழ்வின் பொன்னாள்*


நிருபர் கார்த்திக்