இன்றைய ராசிபலன்

 



        இ‌ன்றைய (14-05-2021) ராசி பலன்கள்


மேஷம்


கூட்டுத்தொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், முக்கியத்துவமும் அதிகரிக்கும். உங்களின் மீதான நம்பிக்கை மேலோங்கும். பலவிதமான எண்ணங்களினால் மனதில் குழப்பமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.



ரிஷபம்


கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்பும் அதிகரிக்கும். விளையாட்டாக பேசும் சில வார்த்தைகள் கூட விபரீதத்தை ஏற்படுத்தும். சுயதொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் ஈடேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



மிதுனம்


மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களின்போது உடைமைகளில் சற்று கவனம் வேண்டும். பொருள் வரவுகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நன்மையளிக்கும்.



கடகம்



கலை நுணுக்கமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சொகுசு வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடங்களில் எதிர்பாராத இடமாற்றங்கள் நேரிடும். மருமகனிடம் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். புத்திரர்களின் வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



சிம்மம்


தந்தைவழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் எண்ணிய விதத்தில் நடைபெறும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான ஆடைகள் மற்றும் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.




கன்னி


அரசு தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சாமர்த்தியமும், திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகளும் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். மனதில் ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் சற்று நிதானம் வேண்டும்.




துலாம்



புதிய தொழில் தொடர்பான எண்ணங்களும், ஆலோசனைகளும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத சில சந்திப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு அடைவீர்கள்.



விருச்சகம்


உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். வாழ்க்கையை பற்றி பகிர்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். கடன் தொடர்பான செயல்பாடுகளால் சில மனக்கசப்புகள் நேரிடும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.



தனுசு



உடனிருப்பவர்களின் தன்மைகளை உணர்ந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும்.




மகரம்


சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் மனத்தெளிவை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். நினைவாற்றலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுபவார்கள்.



கும்பம்




வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் வேறுபட்டு காணப்படுவீர்கள். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 



மீனம்



மனம்விட்டு பேசுவதால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் தெளிவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.


                             *சுபம்*

        வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்