நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவன் சாதனை


சென்னை : மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வில், தமிழக அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், 664 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாணவர், 720க்கு, 710 மதிப்பெண் எடுத்து, அகில இந்திய அளவில், எட்டாம் இடம் பெற்றுள்ளார். அரசு பள்ளி மாணவர்களால், நீட் தேர்வில் சாதிக்க முடியாது என்று கூறி வந்த அரசியல்வாதிகள், இனி வாயை மூடுவதே நல்லது.கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், செப்டம்பர், 13 மற்றும் அக்., 14ல், நீட் தேர்வு நடந்தது. நாடு முழுவதும், 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில், 99 ஆயிரத்து, 610 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நேற்று வெளியிட்டது.