நமது மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள் - முதல்வர் பழனிசாமி ட்வீட்


 


தமிழக வீரர் மாரியப்பனுக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


வரும் 29ம் தேதி காணொளி மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி.


கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள்.