தக்காளி  குருமா

 

காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் போது, தோசை அல்லது இட்லிக்கும், சாதத்திற்கும் ஏற்றவாறான சைடு டிஷ் என்ன உள்ளது என்று யோசித்தால், அப்போது தக்காளி குருமாவை செய்யுங்கள்.


தக்காளியை வைத்து ஒவ்வொருவர் வீட்டிலும், ஒவ்வொரு முறையில் தக்காளி குருமா வைக்கப்படும். அந்த வரிசையில் மிக மிக சுலபமான முறையில், குக்கரில் 2 விசில் வைத்து, தக்காளி குருமா எப்படி வைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்கின்றோம்.

 

அவசர அவசரமாக வேலை செய்யும் சமயங்களில், இட்லி. தோசை. பூரி சப்பாத்தி இவைகளுக்கு சூப்பரான சைட் டிஷ்

 

இதில் மசாலா பொருட்களின் வாசம் கம கமன்னு வீசும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

இந்த தக்காளி குருமாவானது தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அருமையாக இருக்கும். மேலும் இதனை செய்வதும் மிகவும் ஈஸி.

 

இங்கு அந்த தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை காலை வேளையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 


தேவையான பொருட்கள்:

 

தக்காளி - 6 (நறுக்கியது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

 

அரைப்பதற்கு:

 

துருவிய தேங்காய் - 1/4 கப்

தக்காளி - 5

சோம்பு - 3/4 டீஸ்பூன்

இஞ்சி - 1/4 இன்ச்

பச்சை மிளகாய் - 2

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

 

தாளிப்பதற்கு:

 

எண்ணெய் - 3 டீஸ்பூன்

பட்டை - 1/4 இன்ச்

கிராம்பு - 2

பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ

ஏலக்காய் - 1

பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 


முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்க மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

ஒரு குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, சோம்பு – 1/2 ஸ்பூன், பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ, இப்படி உங்கள் வீட்டில்  வாசனைக்கு  எந்த பொருட்கள் இருந்தாலும் தாளித்துக் கொள்ளலாம்.

 

கூடவே 2 பச்சை மிளகாய்  போட்டு, ஒரு கொத்து கறிவேப்பிலையை, போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.

 

சின்ன வெங்காயம் இருந்தால்(15 அளவு,)சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இல்லை என்றால் 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.

 

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின்  ஒரு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

 

வெங்காயம் நன்றாக வதங்கி வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் தக்காளி சேர்த்த விழுதை வெங்காயத்தோடு சேர்த்து, குருமாவிற்கு தேவையான தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன் போட்டு நன்றாக கலக்கிவிட்டு, குக்கர் மூடியைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 விசில் வையுங்கள்.

 

விசில் வரும்போதே வாசனை தூக்கும். அந்த அளவிற்கு குருமா சூப்பராக தயாராகிவிடும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து  பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தக்காளி குருமா ரெடி

 

உங்கள் வீட்டில் இந்த முறையில் ஒருவாட்டி தக்காளி  குருமாவை ட்ரை பண்ணி பாருங்க! திரும்பத் திரும்ப செஞ்சுக்கிட்டே இருப்பீங்க.

 


நாளை உங்களது வீட்டில் தக்காளி  குருமா  செய்து அனைவரையும் அசத்திடுங்கள்


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா