கேரளா மாணவி உயிரிழப்பு

 



கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் லீஜா ஜோஸ்(28). இவர் தென் கொரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ச்சி மாணவியாக படித்து வந்துள்ளார். 


கடந்த பிப்ரவரி மாதம் விடுமுறை காரணமாக  கேரளா வந்துள்ளார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக தென்கொரியா செல்ல முடியவில்லை.


இந்நிலையில், கடந்த  6-ம் தேதி தென் கொரியா சென்றுள்ளார். இதனால், லீஜா ஜோஸ்  14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


அப்போது,  லீஜாவிற்கு காதில் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.


தனிமைப்படுத்துதல்  முடிந்து பிறகு  மருத்துவமனைக்கு  சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், மீண்டும் கேரளாவிற்கு  திரும்ப முடிவு செய்து, கடந்த வியாழக்கிழமை மாலை விமான நிலையம் சென்றுள்ளார்.


அப்போது, விமான நிலையத்திலே லீஜா ஜோஸ் சுருண்டு விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.