கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28-ம் தேதி திறப்பு - துணை முதல்வர்


கோயம்பேடு சந்தை திறக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


அதன்பின் கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.


*சந்தைக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும்


*சந்தைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசம் இல்லை என்றால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் தனிமனித இடைவேளையை பின்பற்றுவது கட்டாயமாகும்.


*உணவு தானிய விற்பனை அங்காடி செப்டம்பர் 18-ல் திறக்கப்படும்.


*மூன்றாம் கட்டமாக, பழம் அங்காடி, மலர் அங்காடி திறக்கப்படும்.


*கனரக வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி.


*சரக்குகளை இறக்கியபின் கோயம்பேடு அங்காடியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் வாகனங்கள் அனைத்தும் வெளியேற வேண்டும்.


*கோயம்பேடு அங்காடிகளில் மூன்று, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை.


*வாரத்தில் ஒரு நாள் அங்காடிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.