தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
சீனாவுடனான பிரச்னையில்இந்தியாவுக்கு அமெரிக்க ராணுவம் எப்போதும் ஆதரவு அளிக்கும்.
இந்தியா சீனா இடையேயான பிரச்னையில் மட்டுமல்ல; உலகின் எந்த பகுதியில் பிரச்னை நடந்தாலும் பலமான நட்புறவின் அடிப்படையில் அமெரிக்க ராணுவம் செயல்படும்.உலகில் உள்ள எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டை அடக்கி அதிகாரம் செலுத்த நினைத்தால் அதைஅமெரிக்க ராணுவம்அனுமதிக்காது; இந்தவிஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
சீனா மட்டுமல்ல; எந்த நாடும் மற்றொரு நாட்டை அடக்கி அதிகாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்'' என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் கூறியுள்ளார்.