திருவண்ணாமலை ட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ரவி(53). ஜமுனாமத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் இறப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் நர்ஸ்கள் வீட்டிற்கு செல்ல முடியாது என்பதால், மருத்துவமனையிலேயே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு தரமின்றி இருப்பதாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட செவிலியர்கள் சில தினங்களுக்கு முன் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியை புறக்கணித்து, மருத்துவமனை வாயிலில் அமர்ந்து நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.