நேற்று (4-7-20) சென்னை மாநகர காவல்துறையும் வியாபாரிகளும் கோரோனா நோயை கட்டுப்படுத்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எவ்வாறு கடைக்கு வரவேண்டும் வியாபாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி.
H 1காவல்நிலையத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையாளர் திரு ஜூலியஸ் சீசர் அவர்களும் H 1காவல் ஆய்வாளர் திரு H ரவி அவர்களும் சென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் P தங்கப்பெருமாள் மற்றும் நிர்வாகிகளும் H 3 காவல் ஆய்வாளர் திரு V தேவேந்திரன் அவர்கள் மற்றும் H 3 கிரைம்ஆய்வாளர் மற்றும் ஷீலா மேரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வடசென்னை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் தண்டையார்பேட்டை மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கொருக்குப்பேட்டைH 4 காவல் ஆய்வாளர் திரு கவிதா அவர்கள் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வடசென்னை வியாபாரிகள் சங்க வியாபாரிகள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகளும் H 5 கிரைம் ஆய்வாளர் திரு கோவிந்த ராஜ் அவர்கள் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் புது வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள் கலந்து கொண்டனர்
_____________________
சென்னை மண்டலம் உள்ளே இயங்க E pass தேவையில்லை என்று போக்குவரத்து ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி கிடைத்ததா, இல்லையா? - ஸ்டாலின்’
தமிழகத்திற்கு கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.6,600 கோடி கிடைத்ததா, இல்லையா? மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்துள்ளது பற்றி முதல்வர் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
கோவை வனக்கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 யானைகள் இறந்தது தொடர்பாக வனத்துறை விளக்கம்' 13 யானைகள் நோய் மற்றும் யானைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்துள்ளன
கடந்த 2 ஆம் தேதி பெண் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது - வனத்துறை