நாளை முதல் ஹால் டிக்கெட்டுகள்


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம்


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 18ஆம் தேதியும் நடைபெற உள்ளது.


பொதுத்தேர்வு மையங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாலும், ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத உள்ளதாலும், புதிய ஹால் டிக்கெட்டுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை நாளை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.