குறுஞ்செய்திகள் - தீவிரமடையும் கொரோனா பாதிப்பு.

 



மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


கொரோனாவை தடுக்க மாவட்ட எல்லைகளை மூடவும் ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்திய கூட்டத்தில் முடிவு என தகவல்


மேலும் மண்டலங்களுக்குள் அரசுப் பேருந்துகளை இயக்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


* சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் 
தீவிரமடையும் கொரோனா பாதிப்பு. 


* கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை.


சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,607 பேர் கொரோனாவால் பாதிப்பு.


நாட்டில் கொரோனாவால் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்வு!
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476 ஆக உயர்வு!
இந்தியாவில் கொரோனாவால் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்வு!


_______________



சென்னைதென்கொரியாவில் இருந்து கூடுதலாக 1.5 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வருகை: தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தகவல்


தமிழகத்தில் தற்போது 6. 77 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பு உள்ளன என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தகவல் அளித்துள்ளது.


____________________


கடன் தவணை உரிமை காலத்தில் செலுத்தவேண்டிய தவணைக்கு (EMI) வட்டி விதிக்கக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


எனவே இது தொடர்பாக RBI மற்றும் நிதி அமைச்சகம்  கூடி கலந்து ஆலோசிக்க வேண்டும்


________________________


"வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்"


* சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்


* வெளிநாடுகளில் இருந்து இதுவரை 26 ஆயிரம் தமிழர்கள் 50 விமானங்கள் மூலம் மீட்பு - மத்திய அரசு


உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் புகார்களை விசாரிக்க முறைமன்ற நடுவத்திற்கு நடுவரை நியமிக்க கோரி வழக்கு


* தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


__________________


டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது, மத்திய அமைச்சரவை


* வரும் 30 ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய ஆலோசனை


____________________


வேலூர் அரசு மருத்துவமனை (அடுக்கம்பாறையில்) வளாகத்தில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பெண் ஒருவர் செருப்பால் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.


___________________


கோவை போத்தனூர் பகுதியில் 15 வயது சிறுமிக்கு 66 வயது முதியவர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்தால் போக்சோ சட்டத்தில்  கைது செய்யப்பட்டார்.


_____________________