தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பு முன்பைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதுடன் உயிரிழக்கும் சூழலும் உருவாகும் எனக் கூறப்பட்டாலும் சமீப நாள்களாக வரும் செய்திகள் அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளன.
சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இள வயதினரும், நடுத்தர வயதினரும் தான். அதுபோல் உயிரிழந்தவர்கள் பட்டியலிலும் வயது குறைவானவர்களின் விவரம் இடம்பெற்றுள்ளன.
தாமோதரனுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகளுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் பாதிப்பு உறுதியானது.
முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனாவுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.