நண்பகல் செய்திகள்


மாவட்ட நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி-  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி:


தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வரும் 22ஆம் தேதி முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோவை, மதுரை, தஞ்சை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


****************************


பாடநூல்கள் விற்பனை


சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர தமிழகம் முழுவதும் பாடநூல்கள் விற்பனை இன்று தொடங்குகின்றன.


18 பேர் கொண்ட குழுவிற்கு முதல்வர் ஒப்புதல்:  பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவிற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


பிளஸ்-2 தேர்வு முடிவுகள்:


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 


**************************


அரசாணை வாபஸ்:


ஊர் பெயர்களின் ஆங்கில எழுத்துகளை மாற்றுவது 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்


* ஊர்களின் தமிழ் எழுத்துகள் மாற்றப்படவில்லை - அமைச்சர் பாண்டியராஜன்


தமிழில் இருக்கும் உச்சரிப்புபோல ஆங்கிலத்திலும் ஊர்ப்பெயர்களை மாற்றும் அரசாணை தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


***********************


திருப்பதி தேவஸ்தானம் தெரிவிப்பு:


திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று (ஜூன் 19) முதல் கூடுதலாக தினசரி 3,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


***********************


மத்திய அரசுக்கு அமைச்சர் வேண்டுகோள்:


தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு செப்டம்பர் வரை இலவசமாக வழங்க அரிசி, பருப்பு வகைகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.


***********************


விவசாயிகள் மகிழ்ச்சி


தென்மேற்கு பருவமழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர்:


கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 


**************************


சென்னையில் இருந்து திருவனந்தபுரம், சொனூர், எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் சரக்கு சிறப்பு ரயில்களின் சேவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


**************************


இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும்" - இந்திய தூதர் கோபால் பக்லே உறுதி


************************


விளையாட்டுச் செய்திகள்



ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்:


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது நிதி பிரச்சினையை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் அடங்குவார்.


**************************