நேற்று (20-6-20)மாலை வடசென்னை வியாபாரிகள் சங்கமும் சாந்தி சாரீஸ் ஜவுளி கடையும் இணைந்து தங்ககிளி திருமண மாளிகையின் முன்னால் வைத்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பொதுமக்களுக்கு மாஸ்க் (முககவசம்) H1 காவல்துறை ஆய்வாளர் திரு H ரவி அவர்களும் அருள் ஜோதி நடுநிலைப் பள்ளி புரவலர் திரு Pதங்கப்பெருமாள் அவர்களும் இணைந்து வழங்கினார்கள்
*******************************
விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலை. கடிதம்
* விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலை. சம்மதம்
*******************
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம்
* உச்சநீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் புதிய மனு தாக்கல்
******************************
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 15ஆவது நாளாக உயர்வு..!
******************************
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,148 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 53 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
* இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 757 ஆக உயர்வு
* கடந்த 8 நாட்களில் 360 பேர் உயிரிழப்பு - தமிழக சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் முதல்முறையாக 2,500ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
இன்று ஒரே நாளில் 2,532 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்தது..
***************************
இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 55.49% ஆக அதிகரித்துள்ளது!
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 2,27,755 ஆக உயர்வு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,10,461 ஆக உயர்வு!
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,254 ஆக உயர்வு!
**********************
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விலங்கு தங்குமிடம் மற்றும் செல்லப்பிராணி கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு மாநில விலங்குகள் நல வாரியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
*******************