தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு


பவானிசாகரில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 


பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  கொடிவேரி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக  ஜூன் 6 ஆம் தேதி  முதல் 7 நாட்கள் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 241 புள்ளி 92 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், இதன் மூலம் கோபி, பவானி, அந்தியூர் பகுதிகளில் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளார்.