தெரிந்து கொள்வோம்


இந்தியாவின் வாயில் பற்றி தெரிந்து கொள்வோம் :


இந்தியாவின் வாயில் (India Gate) என்பது புதுதில்லியில் ராஜ்பத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.


இது முதலில் அனைத்திந்திய போர் நினைவுச்சின்னம் (All India War Memorial) என்றழைக்கப்பட்டது.


1914–21 வரையான காலப்பகுதியில், முதல் உலகப் போர் நடைபெற்றபோது பிரான்ஸ், மெசபடோமியா, ஈரான், கிழக்கு ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் உயிரிழந்த 82,000 பிரித்தானிய இந்தியப் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.


இந்த நினைவுச்சின்னம் எட்வின் லுடியன்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.


நினைவுச்சின்னத்தின் கட்டுமான பணியை முடிக்க சுமார் 10 ஆண்டுகள் ஆனது.


ஐக்கிய இராட்சியம் சேர்ந்தவர்கள் உட்பட வீரர்களினதும், அதிகாரிகளினதும் 13,300 பேர்கள் இவ்வாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.


இந்த நினைவுச்சின்னம் டெல்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.


 இந்தியா வாயிலின் வடிவமைப்பு பாரிசில் உள்ள ஆர்க் டே ரியோம்ப்பை ஒத்திருக்கிறது.  இந்த நினைவுச்சின்ன உயரம் 42மீ ஆகும்.


1971 ஆம் ஆண்டில், வங்காளதேச விடுதலைப் போர் நடைபெற்ற பின் ஒரு சிறிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.


இது ஒரு கருப்பு பளிங்கு நினைவுச் சின்னமாக, துப்பாக்கியின் பின் புறத்தில் ஒரு வீரரின் தலைக்கவசம் அமைந்துள்ளது.


நினைவுச் சின்னத்தின் நாற்புறத்திலும் தீபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு "அமர் ஜவான் ஜோதி" (இறப்பற்ற வீரர்) என அறியப்படுகிறது. இது அறியப்படாத வீரரின் கல்லறையாகவும் விளங்குகிறது.


அன்றைய பிரதமரான இந்திரா காந்தி அவர்களால் ஜனவரி 26, 1972 அன்று திறந்து வைக்கப்பட்டது.


இன்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வருகைபுரியும் நாட்டின் சிறப்பு விருந்தினர்கள், நாட்டின் சிறப்பு தினங்களில் அந்த இடத்தில் மரியாதை செலுத்துவது ஒரு வழக்கமாகவுள்ளது.


மேலும் ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் ராஜ்பாத்தின் ஆண்டு அணிவகுப்பில் இணைந்துகொள்வதற்கு முன்னர் பிரதமர் முப்படைத் தலைவர்களுடன் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுண்டு.


மோகனா செல்வராஜ்