திருமழிசையில் மாற்றப்பட்ட காய்கறி சந்தை செயல்படத் தொடங்கியது


 


சென்னை கோயம்பேட்டிலிருந்து மாற்றப்பட்ட காய்கறிச் சந்தை திருமழிசையில் செயல்பட தொடங்கியுள்ளது.


தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறிச் சந்தையான கோயம்பேடு காய்கறிச் சந்தை கொரோனா பாதிப்பு எதிரொலியாக சமீபத்தில் மூடப்பட்டது. இதையடுத்து சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டது.


சுமார் 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பட்டுள்ள தற்காலிக சந்தையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்,சிம்டிஏ செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வியபாரிகள் ஒன்றிணைந்து குற்றுவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். 


 


மேலும் முதற்கட்டமாக 10க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்து இறங்கின. நள்ளிரவு முதலே மொத்த வியபாரம் தொடங்கியது.


சந்தை உள்ளே வருபவர்களுக்கு கொரானோ உள்ளதா என உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளோ அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு இரவு 12 முதல் காலை 7 மணி வரை வியபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை காய்கறி சரக்குகள் இறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருமழிசை காய்கறிச் சந்தையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.